shadow

ரியாத் விமான நிலையம் மீது ஏவுகணை வீச்சா? பெரும் பரபரப்பு

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள விமான நிலையத்தில் சற்றுமுன்னர் மிகப்பெரிய வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனால் விமானத்திற்கு காத்திருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து சிதறி ஓடினர்.

ரியாத் விமான நிலையத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. ஏமன் நாடு சவுதி அரேபியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் பரவி வருகின்றன.

சவுதி அரேபியா காவலர்கள் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். ஏமன் ஏவுகணை வீசியது உறுதி செய்யப்பட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என சவுதி அரேபியா தரப்பில் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply