ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னருக்கு சுப்பிரமணியம் சுவாமி எதிர்ப்பு
ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமாவை தொடர்ந்த அந்த பதவிக்கு சக்தி கந்ததாஸ் எனபவரை மத்திய அரசு நியமித்துள்ள நிலையில் மத்திய அரசின் இந்த முடிவு தவறானது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்தி கந்த தாஸை நியமித்தது தவறான முடிவு. ப.சிதம்பரத்துடன் நெருக்கமாக இருந்து பல்வேறு முறைகேடு செயல்களில் ஈடுபட்டு, அவர்களை நீதிமன்ற வழக்குகளில் இருந்து காப்பாற்றியவர் சக்தி கந்த தாஸ். எதற்காக இதை அவருக்குச் செய்தார் என்பது எனக்குத் தெரியாது. மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதி இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
ஆனால் மத்திய அரசு மீண்டும் வேறொருவரை ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.