ரிக் இயந்திரம் திடீர் அகற்றம்: புதிய திட்டம் என்ன?

சிறுவன் சுர்ஜித்தை மீட்க கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் ரிக் இயந்திரம் மூலம் ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம் தோண்டும் பணி நேற்று காலை முதல் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இரண்டு ரிக் இயந்திரங்களும் தற்போது பழுதாகிவிட்டதால் அடுத்தகட்டமாக பாறைகளை உடைக்க ரிக் இயந்திரத்திற்கு பதில், போர்வெல் இயந்திரம் மூலம் துளையிட முடிவு செய்யப்பட்டுள்ளது

பாறைகளை உடைக்க போர்வெல் எளிதாக இருக்கும் என்பதால் இந்த முயற்சி எடுக்கப்படவிருப்பதாகவும், அனைத்து துறை அதிகாரிகள், அமைச்சர்கள் ஒப்புதலுடன் இந்த முயற்சி எடுக்கப்பட உள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன,

Leave a Reply