shadow

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு: இலங்கை மீனவர்கள் அட்டூழியம்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் அடிக்கடி துப்பாக்கி சூடு நடத்துவதாகவும், இலங்கை மீனவர்கள் தாக்கி வருவதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளிவ்நது கொண்டிருக்கும் நிலையில் இன்றும், ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் 50க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளின் மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

Leave a Reply