ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை: திமுகவுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ

ராதாபுரம் தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபடி, இன்று காலை மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறுகிறது.

1508 தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன. திமுக வேட்பாளர் அப்பாவு சார்பில் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அரங்கில் உள்ளார். இந்த வாகு எண்ணிக்கை 4 மணிநேரம் நடைபெறும் என தெரிகிறது

தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 2 மணி நேரமும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண 2 மணி நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply