shadow

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய மணக்கோலத்தில் வேண்டுகோள் விடுத்த புதுமணத்தம்பதி

முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்தும் வரும் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டிய தமிழக ஆளுனர் தொடர்ந்து அமைதி காத்து வருகிறார்

இந்த நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி திண்டுக்கலில் இன்று திருமணம் செய்துகொண்ட மணிவண்ணன் & வினோதினி தம்பதியினர் மணக்கோலத்தில் 7 நிரபராதிகளை விடுதலை செய், சட்டமன்ற தீர்மானத்திற்கு உயிர் கொடு என பதாகையை ஏந்தி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

தாலி கட்டிய அடுத்த நிமிடமே புதுமண தம்பதிகள் இந்த பதாகையை ஏந்தி நின்ற காட்சி, திருமணத்தில் கலந்து கொள்ள வந்திருந்த அனைவரும் ஆச்சரியப்படுத்தியது

Leave a Reply