ராஜீவ் காந்தியுடன் பலியான 14 பேர்களின் மரணத்திற்கும் சீமான் தான் காரணமா?

தமிழினத்தை அழிக்க அமைதிப்படையை அனுப்பியதால் ராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொலை செய்தோம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் சீமான் அவர்களுக்கு நெட்டிசன்கள் தற்போது ஒரு கேள்வியை எழுப்பியுள்ளனர்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தில் அவர் மட்டும் பலியாகவில்லை. அவருடன் சேர்த்து மொத்தம் 14 பேர் பலியாகினர். ராஜீவ் காந்தியை கொலை செய்தது சீமான் என்றால், அந்த 14 பேர் கொலைக்கும் சீமான் தான் காரணமா? அப்படியென்றால் அந்த 14 அப்பாவிகள் சீமானுக்கு என்ன துரோகம் செய்தனர்? இதற்கு சீமான் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Reply