இலங்கை தேர்தலில் வெற்றி

இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் ராஜபக்சவின் கட்சி முன்னிலையில் உள்ளதை அடுத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கொரோனா பாதிப்புள்ள சூழலிலும் தேர்தலை சிறப்பாக நடத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கும் பாராட்டு என்று கூறியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் முன்னிலை தகவலின்படி ராஜபக்சேவின் பொதுஜன பெரமுன கட்சி – 67.03% வாக்குகளும், சஜித் பிரேமதாசவின் மக்கள் சக்தி கட்சி 16.99% வாக்குகளும், ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி 2.34% வாக்குகளும், சம்பந்தனின் தமிழ் அரசு கட்சி 2.28% வாக்குகளும், பெற்றுள்ளன. மகிந்தாவின் கட்சி கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டதாகவே கருதப்படுகிறது

இலங்கை, நாடாளுமன்றம், தேர்தல், மகிந்தா,

Leave a Reply