ராகுல்காந்தி நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது எப்படி? கல்லூரி கல்வி இயக்குனர் கேள்வி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த 13ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் அக்கல்லூரியின் மாணவிகளுடன் உரையாடினார்.

இந்த நிலையில் சென்னை தனியார் மகளிர் கல்லூரியில் ராகுல்காந்தி பங்கேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது எப்படி? என கல்லூரி கல்வி இயக்குனர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது தனியார் கல்லூரி இதுபோன்ற ஒரு நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதிக்கலாம்? இதுகுறித்து நேரில் விசாரித்து அறிக்கை தர இணை இயக்குனருக்கு, கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply