ராகுல்காந்தி குறித்து அவதூறு: இமாச்சல பிரசேத பாஜக தலைவருக்கு தடை

இமாச்சல பிரசேத மாநில பாஜக தலைவர் சத்பால் சாத்தி இன்று காலை 10 மணி முதல் 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த விவகாரத்தில் இமாச்சல பிரசேத மாநில பாஜக தலைவர் சத்பால் சாத்தி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

ஏற்கனவே உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி ஆகியோர்களும் தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply