ராகுல்காந்தியுடன் ஒன்றாக பேருந்தில் பயணம் செய்த மு.க.ஸ்டாலின்
ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒன்றாக பயணம் செய்தனர்.
இந்த விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒன்றாக பயணம் செய்தனர்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனிவிமானம் மூலம் ராஜஸ்தான் சென்றார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பின், மூன்று மாநிலங்களுக்கான முதல்வர்களை காங்கிரஸ் தேர்வு செய்து அறிவித்தது.
அதன்படி, ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெல்லாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும், இன்று காலை ஜெயப்பூர் ஆல்பர்ட் மண்டபத்தில் நடந்த விழாவில் பதவியேற்றனர். இதில் பங்கேற்க வருமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று, மு.க.ஸ்டாலின் இன்று 2 மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவிலும் கலந்துகொள்ளகிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.