shadow

ராகுலுக்கும் ஸ்டாலினுக்கும் கனவில் மட்டுமே பதவி: தமிழிசை தாக்கு

மத்தியில் ராகுல்காந்திக்கு பிரதமர் பதவியும்,, தமிழகத்தில் மு.க. ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதவியும் கனவில் மட்டுமே முடியும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னையில் நடைபெற்ற பாஜக வணிகர் மாநாட்டில் பேசியுள்ளார்.

மேலும் நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, ‘ நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்தற்கும், பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் கூறியுள்ளார். மேலும் நக்கீரன் கோபால் விஷயத்தில் ஒரு குறிப்பிட்ட சட்டப்பிரிவை பயன்படுத்தியதை நீதிமன்றம் ஏற்கவில்லை என்பதால் இதனை ஒரு சட்ட முரண்பாடாக மட்டும் தான் பார்ப்பதாகவும், இதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தமிழிசை கூறியுள்ளார்.

 

Leave a Reply