shadow

ரயில்வே ஊழியர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த தடை

இந்தியன் ரயில்வேயில் பணிபுரிபவர்கள் பணி நேரத்தின்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியன் ரயில்வேயின் டெல்லி டிவிசன் இதுகுறித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: பயணிகளின் பாதுகாப்பை கணக்கில் கொண்டு டெல்லி டிவிசனில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள் பணி நேரத்தின் போது வாட்ஸ் அப், யூடியூப், போன்ற சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக ரயில் எஞ்சின் டிரைவர்கள், கார்டுகள், ஸ்டேஷன் மேனேஜர்கள் உள்பட அனைவரும் இதனை கடைபிடிக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply