shadow

ரயிலில் ஆயுதபூஜை கொண்டாடிய 15 மாணவர்கள் கைது

சென்னை மின்சார ரயிலில் அவ்வப்போது மாணவர்கள் ஆயுதங்களை எடுத்து கொண்டு வந்து பயணிகளை பயமுறுத்து வரும் நிலையில் நேற்று சென்னை சென்ட்ரலில் மின்சார ரயிலில் ஆயுத பூஜை கொண்டாட முயற்சி செய்த கல்லூரி மாணவர்களை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருத்தணி நோக்கி செல்லக் கூடிய ரயில் முன்பு, ஆயுத பூஜை கொண்டாட்டம் என்று மாணவர்கள் சிலர் கட்டியிருந்த பேனரை அவிழ்க்குமாறு கூறி ரயில்வே போலீசார் எச்சரித்தனர்.

*ஆனால் மாணவர்கள் கேட்காததால், சென்ட்ரல் ரயில்வே போலீசார் 15 மாணவர்களை கைது செய்தனர். விசாரணையில் அனைவரும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை எச்சரித்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

Leave a Reply