ரபேல் வழக்கு: அரசின் ஆட்சேபங்கள் நிராகரிப்பு

ரபேல் வழக்கில் அரசின் ஆட்சேபங்களை நிராகரித்தது உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

கடந்த சில மாதங்களாக பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கையாண்ட ஆயுதம் ரபேல். குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இதுகுறித்து ஆவேசமாக பாராளுமன்றத்தில் பேசினார்.

இந்த நிலையில் புதிய ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ள உச்சநீதிமன்றம் , திருடப்பட்ட ஆவணங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ரபேல் குறித்து இந்து நாளிதழில் வெளியான ஆவணங்களை பரிசீலிக்கவும் உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

Leave a Reply