ரஜினி மதிப்பு இன்னும் பலமடங்கு உயர்ந்திருக்கும்: வைகோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்பட்டு வரும் விவகாரம் இன்னும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்காத அரசியல்வாதிகளை இல்லை என்று கூறலாம். அந்த வகையில் தற்போது இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்

வடநாட்டு இளைஞர்களும் கூட பெரியாரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டிருக்கும் இந்த காலத்தில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ரஜினிகாந்த் அவர்கள் அதற்காக வருத்தம் தெரிவித்து இருந்தால் அவருடைய மதிப்பு இன்னும் பல மடங்கு உயர்ந்து இருக்கும்

ரஜினிகாந்த் இன்றும் திரையுலகில் மிகப் பெரிய ஒரு நடிகராக இருந்து வருகிறார். அவர் எனக்கும் நண்பர்தான். தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோவே பெரியாரை புகழ்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்று வைகோ தெரிவித்துள்ளார்

Leave a Reply