ரஜினி படத்தில் சூர்யாவா? பி.ஆர்.ஓ விளக்கம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 167’ படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருப்பதாக ஒருசில இணையதளங்களில் செய்திகள் வெளியானது. ஏற்கனவே அவர் விஜய்யின் ‘மெர்சல்’ மற்றும் ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஸ்பைடர்; ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளதால் இந்த செய்தியும் உண்மை என கருதப்பட்டது.
ஆனால் ரஜினியின் பிஆர்.ஓ இந்த செய்தியை மறுத்துள்ளார். ‘தலைவர் 167’ படத்தில் யார் வில்லன் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதாக வெளிவந்துள்ள தகவலில் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 10ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.