ரஜினி கருத்து தெரிவிக்க மறுத்த விஷயத்திற்கு துணிச்சலுடன் கருத்து தெரிவித்த லதா ரஜினிகாந்த் கருத்து!

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த நிலையில் இந்த அறிவிப்புக்கு வழக்கம்போல் ரஜினிகாந்த் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

தமிழக அரசியல் கட்சிகள் இந்த திட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் இதுகுறித்து ரஜினியின் கருத்து என்ன? என்பதை அறிய தமிழக மக்கள் ஆர்வத்துடன் இருந்தனர்.

இந்த நிலையில் ரஜினிக்கு பதிலாக அவரது மனைவி இதுகுறித்து இன்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டபோது தெரிவித்தார். 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையில்லை என்றும், தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும் என்றும், தேர்வுகள் மூலம் குழந்தைகளின் திறனை அளவிட முடியாது என்றும் லதா ரஜினிகாந்த் தெரிவித்தார். லதாவின் கருத்தை பலரும் வரவேற்றுள்ளனர்.

 

Leave a Reply