ரஜினியை அடுத்து லாரி தண்ணீர் சப்ளை செய்த ஸ்டாலின்!

ரஜினியின் அறிவுரையின்படி அவரது ரசிகர்கள் சென்னையின் பல பகுதிகளில் லாரிகள் மூலம் குடிதண்ணீர் சப்ளை செய்து வரும் நிலையில் இன்று சென்னை கொளத்தூர் தொகுதியில், பொதுமக்களுக்கு இலவச குடிநீர் வினியோகத்தை, திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவு வரும் நிலையில், பொதுமக்களுக்கு டேங்கர் லாரிகளில் குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று திமுக சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில், டேங்கர் லாரி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது.

பெரியார் நகர், ஜி.கே.எம். காலனி ஆகிய இடங்களில் டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்பட்ட குடிநீரை, பொது மக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரடியாக வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், வடசென்னை தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சேகர்பாபு எம்.எல்.ஏ மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a Reply