ரஜினியின் பாராட்டால் உற்சாகமாகிய ‘அறம்’ படக்குழு
நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள ‘அறம்’ படக்குழுவினருக்கு ரஜினி தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அறம்’. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
விமர்சன ரீதியாக இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. பல்வேறு திரையுலக பிரபலங்களும் இப்படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ரஜினிக்கு ‘அறம்’ படத்தைப் பிரத்யேகமாகத் திரையிட்டார்கள். இப்படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரை வெகுவாக பாராட்டியிருக்கிறார் ரஜினி. முக்கியமான சமூகப் பிரச்சினையை அற்புதமாக கூறியிருப்பதாக படக்குழுவினருக்கு தெரிவித்திருக்கிறார். ரஜினியின் பாராட்டால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறது படக்குழு.
மேலும் முதல் நாள் வசூலை விட, தொடர்ச்சியாக வசூலும் அதிகரித்து வருவதால் படக்குழுவும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.