ரஜினியின் கனவை நிறைவேற்றிய பிரபல இயக்குனர்
இந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்பதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பலநாள் கனவாக இருந்து வருகிறது. தனது கனவை நிறைவேற்ற அரசு முயற்சி எடுத்தால் அதற்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளிக்க தயார் என்றும் ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்திருந்தார்
ஆனால் நதிகளை இணைக்க இதுவரை எந்த அரசும் முயற்சிக்கவில்லை. இந்த நிலையில் ரஜினியின் கனவை இயக்குனர் ஆர்.கண்ணன் தனது ‘பூமராங்’ படத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளார். இந்த படத்தின் கதை நதிகளை இணைப்பதுதான் என்பதும், அதில் ஏற்படும் பிரச்சனையை ஹீரோ எப்படி சமாளிக்கின்றார் என்பதுதான்
இந்த நிலையில் ‘பூமராங்’ படத்தின் இயக்குனர் ஆர்.கண்ணன் தனது படக்குழுவினர்களுடன் இன்று ரஜினியை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தர். பூமராங் படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த, ரஜினிகாந்த் இந்த படத்தின் கதை குறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.