ரஜினியின் ஒரே ஒரு நிமிட பேச்சு: 50 ஆண்டு வரலாறு தோண்டப்படுகிறது

துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் அவர்கள் 15 நிமிடம் பேசியிருந்தாலும் பெரியார் குறித்து அவர் பேசியது ஒரே ஒரு நிமிடம் தான். அந்த ஒரு நிமிட பேச்சுக்கு கடந்த 15 நாட்களாக தமிழகத்தில் ஆரவார ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன

அதுமட்டுமன்றி இதுவரை இந்து கடவுள்களை அவமரியாதை செய்தோம் என்று கூறிய பெரியாரின் ஆதரவாளர்கள் அந்த ஊர்வலத்தில் இந்து கடவுளை அவமரியாதை எதுவும் செய்யவில்லை என்று கூறி வருகின்றனர்

மேலும் இது குறித்த ஆதாரங்களை பலர் தோண்ட ஆரம்பித்தனர். பெரியாரின் ஆதரவாளர்கள் ரஜினியின் பேச்சுக்கு மறுப்பு தெரிவிப்பதற்காகவும் ரஜினியின் ஆதரவாளர்கள் ரஜினியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும் கடந்த 50 ஆண்டு வரலாறுகளை தோண்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினியின் ஒரே ஒரு நிமிட பேச்சால் 50 ஆண்டு வரலாறு தோண்டப்படும் நிலையில் அவர் மணிக்கணக்கில் பேசினால் என்ன ஆகும் என்பதை நினைத்துப் பாருங்கள்

Leave a Reply