ரஜினியின் ‘அதிசயத்தை கிண்டல் செய்த திருமாவளவன், கே.எஸ்.அழகிரி!

ஊடகங்களில் தங்களது பெயர் தலைப்பு செய்திகளில் வரவேண்டும் என்றால் ரஜினி என்ன கூறுகின்றாரோ அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேட்டி அளிக்க வேண்டும் அல்லது அறிக்கை விட வேண்டும் என்பதுதான் தற்போதைய அரசியல்வாதிகளின் ஃபார்முலாவாக உள்ளது

அந்த வகையில் வரும் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் ’அதிசயம் அற்புதம்’ நிகழும் என்றுசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு அளித்த பேட்டிக்கு தமிழகத்தில் உள்ள பெரிய கட்சி தலைவர் முதல் நேற்று ஆரம்பித்த கட்சி தலைவர் வரை பதில் கூறி ஊடகங்களில் தங்கள் பெயரை நிலை நிறுத்தி கொண்டனர்.

அந்த வகையில் அடுத்ததாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இதுகுறித்து கூறியபோது, ‘அதிசயம் நடைபெறும் என, நடிகர் ரஜினிக்கு இமயமலையில் யாராவது கூறியிருப்பார்கள் என்று கிண்டலுடன் கூறியுள்ளார்.

அதேபோல் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் இதுகுறித்து கூறியதாவது: ஜினி போன்றவர்கள் அரசியலுக்கு வருவது தவறான ஒன்று என்பது எனது கருத்து என்றும் 2021 ஆம் ஆண்டில் ’அதிசயம் நிகழும்’ என்ற சினிமா வேண்டுமானால் வரும், ஆனால் எந்த அதிசயமும் நிகழாது என்றும் கூறியுள்ளார்

Leave a Reply