யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா? – நெல்சன் விளக்கம்
கோலமாவு கோகிலா’ படம் நாளை உலகம் முழுவதும் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தில் யோகி பாபுவின் காதலை நயன்தாரா ஏற்றுக் கொள்கிறாரா?’ என்பது தான் தற்போதைய டிரண்டாக உள்லது.
இயக்குனர் நெல்சன் இதுகுறித்து கூறியபோது “இதுதான் நான் ‘கல்யாண வயசு’ பாடலில் இருந்து வெட்ட வேண்டிய ஒரே விஷயமாக இருந்தது. இல்லையென்றால் இப்போது உங்களுக்கு உள்ள அந்த ஆர்வம் இருந்திருக்காது. திரையரங்குகளுக்கு வந்து நயன்தாரா யோகிபாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்” என்றார்.
கோலமாவு கோகிலா படம் எதை பற்றியது என இயக்குனர் நெல்சன் ஓரிரு வார்த்தைகளில் கூறும்போது, “கோலமாவு கோகிலாவில் நீங்கள் தீவிரத்தை, குடும்ப உறவுகளை உணரலாம். பழிவாங்கலில் சேர்ந்து கொள்வீர்கள், விழுந்து விழுந்து சிரிக்கும் தருணங்களில் அனுபவிப்பீர்கள், படம் உங்களை சீட்டின் நுனிக்கும் இழுத்து செல்லும்” என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.