யாஷிகாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இயக்குனர்! அதிர்ச்சி தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம், பிரபலமான நடிகை யாஷிகாவுக்கும் ஒரு இயக்குனர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது தெரிய வந்துள்ளது
வைரமுத்து முதல் அர்ஜூன் வரை பாலியல் குற்றச்சாட்டுக்களை சின்மயி முதல் அமலாபால் வரை சொல்லிக்கொண்டே இருப்பதால் கோலிவுட் திரையுலகம் பெரும் பரபரப்பில் உள்ளது.
இந்த நிலையில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ உள்பட ஒருசில படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த் தன்னை ஒரு இயக்குனர் ஒருவர் பாலியல் தொல்லை செய்ததாக கூறியுள்ளார்.
சினிமாவில் வாய்ப்புத் தேடும்போது நானும் ஒரு இயக்குனரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், மீடூவுக்கு என் முழுமையான ஆதரவை தருவேன் என்றும், என்னை நேரடியாக துன்புறுத்தியிருந்தால் நான் புகார் தெரிவித்திருப்பேன், ஆனால் தாய் மூலம் முயற்சித்ததால் புகார் அளிக்கவில்லை என்றும் கூறினார்
Leave a Reply
You must be logged in to post a comment.