shadow

யார் பரோலில் வந்தாலும் ஆட்சியில் எந்த தாக்கமும் இருக்காது. ஜெயகுமார்

அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா நேற்றிரவு பரோலில் வெளியே வந்துள்ள நிலையில் அதிமுகவில் தாக்கமும் திருப்பமும் ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார், ‘சசிகலா சொந்த விஷயம் காரணமாக பரோலில் வந்துள்ளார். ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி அதிமுக கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி அவருடைய குடும்பத்தினர்களின் தாக்கம் இல்லாமல் தான் தற்போது உள்ளது.

இனியும் சசிகலா குடும்பத்தின் தாக்கம் கட்சியிலும் ஆட்சியிலும் இருக்காது. சசிகலா பரோலில் வந்துள்ளது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறினார்.

Leave a Reply