யார் தமிழன்? சீமானுக்கு தமிழிசை கேள்வி
தமிழகத்தை தமிழனே ஆள வேண்டும், தமிழகத்தில் இருப்பவர்கள் அனைவரும் தமிழர்கள் அல்ல, தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் வாழலாம், ஆனால் ஆளுகிற உரிமை தமிழனுக்கே உண்டு என பல மேடைகளில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருகிறார்.
இந்த நிலையில் சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியதாவத்:
கவரிமானாக வாழ்பவர்களே தமிழர்களின் அடையாளம் “கவர்ச்சி”மானாக வாழ்பவர்கள் அல்ல.இவர்தான் தமிழர் எனும் அடையாளம் காட்டும் உரிமையை சீமானுக்கு வழங்கியது யார்?ஒடுக்கப்பட்டவருக்காக குரல் கொடுப்பதே தமிழர் அடையாளம்… என்று தமிழிசை கூறியுள்ளார்
தமிழிசையின் இந்த டுவீட்டுக்கு டுவிட்டர் பயனாளிகள் பாராட்டியும் விமர்சனம் செய்தும் கமெண்ட்டுக்கள் பதிவு செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.