யாருடைய பேச்சை கேட்டு விஜய் பேசினார் என தெரியவில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ
‘பிகில்’ படத்தின் ஆடியோ விழாவில் விஜய் பேசிய சில கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகி ஆளும் அதிமுகவினர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்து வருவது தெரிந்ததே. அந்த வகையில் நேற்று அதிமுகவின் வைகைச்செல்வன், பா.வளர்மதி மற்றும் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விஜய் கருத்துக்கு பதிலடி கொடுத்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு சரியாகத்தான் வைத்துள்ளார்கள். விஜய் போன்றவர்களின் பேச்சைக் கேட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டியதில்லை. தன்னுடைய பேச்சை மக்கள் கேட்பார்கள் என்று விஜய் நினைத்து கொண்டால் அது அவருடைய அறியாமைதான். திரைப்படம் ஓடுவதற்காக நடிகர்கள் பரபரப்பாக பேசுகின்றார். இதில், விஜய் யாருடைய பேச்சை கேட்டு இவ்வாறு பேசினார் என தெரியவில்லை’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.