யாருடன் கூட்டணி? நாளை அறிவிக்கவுள்ளதா பிரேமலதா தகவல்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிடும் என்பதை நாளை அறிவிக்கவுள்ளதாக தேமுதிக நிர்வாகிகள் மத்தியில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேசியுள்ளார்.
நேற்று துணை முதல்வர் ஓபிஎஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசியவுடன் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என உறுதியாக நம்பப்பட்டது. ஆனால் இன்னும் தேமுதிக யோசித்து கொண்டே இருப்பதாக பிரேமலதாவின் பேச்சில் இருந்து தெரிய வருகிறது.
மற்ற கட்சிகள் அனைத்தும் கூட்டணி மற்றும் தொகுதியையும் முடிவு செய்துவிட்ட நிலையில் தேமுதிக மட்டும் வழக்கம் போல் முடிவெடுக்க காலதாமதம் செய்து வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.