மோதலில் ஈடுபட்ட 2 மாணவர்கள் சஸ்பெண்ட்:
சென்னை அரும்பாக்கம் அருகே நேற்று பேருந்து ஒன்றில் மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட 2 மாணவர்கள் கல்லூரியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதாக பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருண் மொழிசெல்வன் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் குடும்ப சூழலும் மோதலுக்கு காரணம் மாணவர்களின் மோதல் போக்கை களைய கல்லூரியின் சார்பில் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படவுள்ளதாகவும் கல்லூரி முதல்வர் அருண் மொழிசெல்வன் கூறினார்
முன்னதாக நேற்று இரண்டு மாணவர்கள் ஒரு மாணவரை நடு ரோட்டில் அரிவாளை எடுத்து கொண்டு விரட்டி விரட்டி வெட்ட முயற்சித்தது சினிமாவை மிஞ்சும் அளவுக்கு திகிலாக இருந்தது என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்
Leave a Reply
You must be logged in to post a comment.