மோடி மீண்டும் பிரதமர் ஆகாவிட்டால் நாட்டுக்கே ஆபத்து: பிரபல நடிகை

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் என பிரபல பாலிவுட் நடிகை ஹேமாமாலினி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மக்களவை தொகுதியில் போட்டியிடும் நடிகை ஹேமாமாலினி நேற்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது ஒரு கூட்டத்தில் பேசிய அவர் மோடிக்கு இருக்கும் துணிவு கடந்த காலங்களில் இருந்த பிரதமர்களுக்கு இல்லை என்று தெரிவித்தார்.

மேலும் மோடிதான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்றும் அவர் வெற்றி பெறாமல் வேறு யாராவது வென்றால் அது நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஹேமாமாலினி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply