shadow

jaya_1055242gமத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மறைவு காரணமாக மோடி-ஜெயலலிதா சந்திப்பில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக டெல்லியில் இருந்து செய்திகள் கூறுகின்றன.

தமிழக பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்ய பிரதமர் மோடியை சந்திக்க இன்று காலை தமிழக முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்றுள்ளார். காலை 11 மணிக்கு டெல்லி சென்றடைந்த முதல்வர், தமிழ்நாடு இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் அவர் பிரதமரை சந்திக்க கிளம்பயிருந்த நேரத்தில் பிரதமர் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றிருப்பதாக தகவல் வந்ததால் பிரதமரை சந்திக்க ஜெயலலிதாவுக்கு கொடுத்த நேரம் மாற்றப்பட்டுள்ளது.  அனேகமாக இன்று மதியம் அல்லது மாலை பிரதமரை முதல்வரை சந்திப்பார் என கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்குவது, மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் பிரச்சனை மற்றும் காவிரி, முல்லைபெரியாறு போன்ற பிரச்சனைகள் குறித்து விவாதிப்பார் என தெரிகிறாது. பிரதமரை சந்தித்த பின்னர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோர்களையும் ஜெயலலிதா சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply