shadow

மோடி அலை ஓய்ந்துவிட்டது. கர்நாடக முதல்வர் சித்தராமையா

குஜராத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் மோடி அலை ஓய்ந்துவிட்டது, இனி பாஜகவுக்கு பின்னடைவுதான் என கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.

நேற்று மைசூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் சித்தராமையா கூறியதாவது: அனைத்து மாநிலங்களையும் சமவிகிதத்தில் நடத்த வேண்டிய மத்திய அரசு கர்நாடக மாநிலத்துக்கு அளிக்க வேண்டிய உரிய நிதி பங்கீட்டை அளிப்பதில்லை. வரி வசூல் தொகையில் 42 சதவீதத்தை மட்டும்தான் மாநில அரசுகளுக்கு கொடுக்கிறது.

வறட்சி நிவாரண நிதியாக மகாராஷ்டிராவுக்கு 8,500 கோடி ரூபாயும், குஜராத்துக்கு 4,000 கோடி ரூபாயும் அளித்துள்ள மத்திய அரசு, அவ்விரு மாநிலங்களைவிட வறட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகத்துக்கு வெறும் 1,550 கோடி ரூபாய் மட்டுமே வறட்சி நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மோடி அலை படிப்படியாக ஓய்ந்து வருகிறது. குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும்’ என்று கூறினார்

Leave a Reply