மோடியை திருடன் என கூறிய ராகுல்காந்தி மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு


ரஃபேல் விவகாரத்தில் மோடி காவலாளி அல்ல, திருடன் என உறுதியாகிவிட்டதாக ராகுல் கூறியதை எதிர்த்து பாஜக பெண் எம்.பி ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

பாஜக எம்பி மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே ராகுல்காந்தி ரஃபேல் விவகாரம் குறித்து பிரதமர் மோடி மீது கடும் குற்றச்சாட்டுக்களை அடுக்கி கொண்டே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply