மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார்: பிரியங்கா காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டால் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட தயார் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

இன்று வயநாடு தொகுதியில் ராகுல்காந்திக்காக பிரச்சாரம் செய்த பிரியங்கா காந்தி செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா காந்தி இதனை தெரிவித்தார்.

வாரணாசி தொகுதியில் கடைசி கட்டமாக மே 19ஆம் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரியங்கா காந்தி போட்டியிட்டால் வாரணாசியில் மோடியின் வெற்றி கேள்விக்குறியே என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.,

Leave a Reply