shadow

மோடிக்கு ராகுல்காந்தி விஷ ஊசி போட்டாரா? சு.சுவாமியின் சர்ச்சை டுவீட்

தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் நடந்தது. அபோது ராகுல் காந்தி அதில் பங்கேற்று பேசிவிட்டு திடீரென அவையில் அமர்ந்திருந்த பிரதமரை கட்டி அணைத்தார். இதை எதிர்பார்க்காத பிரதமர் ராகுலை மீண்டும் அழைத்து தட்டிக் கொடுத்ததோடு கைகுலுக்கினார்

இந்த நிலையில் பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி ஒரு புது சர்ச்சையை தனது ட்விட்டரில் கிளப்பியுள்ளார். அவர் அதில் கூறியதாவது: தன்னை ராகுல் காந்தி கட்டியணைக்கை பிரதமர் மோடி அனுமதித்திருக்க கூடாது. ரஷ்யர்களும், கொரியர்களும் விஷ ஊசி செலுத்தி தங்கள் எதிரிகளை வீழ்த்த இந்த முறையை கடைபிடிக்க முயல்வார்கள்

மேலும் பிரதமர் மோடி உடனடியாக மருத்துவமனை சென்று, தனது உடலில் ஏதேனும் விஷ ஊசி செலுத்தப்பட்டுள்ளதாக என பார்க்க வேண்டும். சுனந்தா புஷ்கர் உடலிலும் இதே போன்று விஷ ஊசி செலுத்தப்பட்டிருந்தது’ என்று கூறியுள்ளார். சுவாமியின் இந்த கருத்தை ஒருசிலர் தவிர யாரும் சீரியஸாக எடுத்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply