மொழி பெயர்ப்பில் தவறு நடந்துள்ளது. அமித்ஷா பேச்சு குறித்து அமைச்சர் ஜெயகுமார்
நேற்று பாஜக தலைவர் அமித்ஷா சென்னையில் பாஜக தொண்டர்களிடையே பேசுகையில் தமிழக அரசையும் விமர்சனம் செய்து பேசினார். மத்திய அரசின் பினாமி என்று அதிமுக அரசை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் பாஜக தலைவரே அதிமுக அரசை விமர்சனம் செய்தது ஆச்சரியத்தை அளித்தது.
இந்த நிலையில் அமித்ஷா பேச்சு குறித்து அமைச்சர் ஜெயகுமார் கூறியபோது, தமிழக அரசைப் பற்றி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நல்லபடியாகத் தான் கூறியிருப்பார். ஆனால் மொழி பெயர்த்த எச்.ராஜா தான் மாற்றிக் கூறியிருப்பார் என்று கூறினார்
ஏற்கனவே அமித்ஷா சொட்டுநீர் பாசனம் என்று கூறியதை சிறுநீர் பாசனம் என்று மொழி பெயர்த்தவர் எச்.ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.