மைசூர்பாகு வாங்காம சென்னையில் இருந்து வந்துறாதே! கணவருக்கு கட்டளையிட்ட தீபிகா படுகோனே
கடந்த 1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக் கோப்பை வென்ற சரித்திர சாதனை முக்கிய நிகழ்வை குறிப்பிடும் வகையில் தற்போது உருவாக்கப்பட்டு வரும் திரைப்படம் 83
இந்த திரைப் படத்தின் தமிழ் உரிமையை கமல்ஹாசன் வாங்கியுள்ளார். இதனை அடுத்து சென்னையில் இந்த படத்தின் புரமோஷன் விழா நேற்று நடைபெற்றது
இந்த விழாவில் படக்குழுவினருடன் கமல்ஹாசன் மற்றும் கபில்தேவ் ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்த நிலையில் இது குறித்து இந்த படத்தின் நாயகன் ரன்வீர்சிங் ’சென்னையில் கபில்தேவின் புயல் தோன்றியது’ என்று இந்த விழா குறித்து குறிப்பிட்டிருந்தார்
இதற்கு கமெண்ட் அளித்த பிரபல நடிகையும் ரன்வீர்சிங் கணவருமான தீபிகா படுகோனே ’சென்னையில் இருந்து வரும்போது கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ஸில் ஒரு கிலோ மைசூர்பாகும், ஹாட்சிப்\சில் இரண்டரை கிலோ உருளைக்கிழங்கு சிப்ஸ்ஸும் வாங்காமல் திரும்பி வந்துறாதே! என்று அன்புக்கட்டளையிட்டுள்ளார். இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.