மே.இ.தீவுகள் அணிக்கு 468 ரன்கள் இலக்கு: இந்தியா எடுத்த ரிஸ்க்

கிங்ஸ்டனில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் நேற்றைய 3வது நாள் ஆட்டத்தில் 117 ரன்களுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி ஆட்டமிழந்தது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் 299 ரன்கள் லீட் இருந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

இதனால் மே.இ.தீவுகள் அணி வெற்றி பெற 468 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தியா எடுத்த இந்த ரிஸ்க்கை எடுத்து மே.இ.தீவுகள் அணி 2வது இன்னிங்ஸில் 13 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 8 விக்கெட்டுக்களை இந்தியா எடுக்குமா? மே.இ.தீவுகள் அணி 423 ரன்கள் எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply