மேகாலயா மாநிலத்தில் பணியாற்றிய தமிழக ராணுவ வீரர் மரணம்!

மேகாலயா மாநிலம் ஷில்லாங் பகுதியில் பணியாற்றி வந்த தமிழக ராணுவ வீரர் மாரீஸ்வரன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மாரீஸ்வரான் உடலை பார்க்க அங்கு திரண்டிருந்த பொது மக்கள் மாரிஸ்வரன் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ராணு வீரர்கள் மரியாதையுடன் மாரீஸ்வரனின் உடல் கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்று உடல் தகனம் செய்யப்பட்டது.

மாரீஸ்வரன் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply