மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கு தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: சித்தராமையா
மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கு தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் பெங்களூரில் நேற்று மேகதாது திட்டம் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய அவர், மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டம் முந்தைய காங்கிரஸ் அரசின் மிக முக்கியமான திட்டம் ஆகும். இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனாலும் அரசியல் நோக்கத்திற்காக தமிழக அரசு பிரச்சினை செய்கிறது.
கர்நாடகத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த எந்த தடையும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டு மற்றும் நடுவர் மன்ற தீர்ப்புகளும் கர்நாடகத்திற்கு சாதகமாக உள்ளன. அணை கட்டக்கூடாது என்று எந்த தீர்ப்பிலும் சொல்லப்படவில்லை
Leave a Reply
You must be logged in to post a comment.