மெல்போர்ன் டெஸ்ட்: 399 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா
இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் மெல்போர்னில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 106 ரன்களுக்கு டிக்ளேர் செய்துவிட்டதால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 399 ரன்கள் என்ற இலக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கை நோக்கி விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி சற்றுமுன் வரை 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்துள்ளது. பின்ச் 3 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மெல்போர்ன் மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ள நிலையில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கருதப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.