மெல்போர்னை மிஞ்சும் பிரமாண்ட கிரிக்கெட் மைதானம்: டிரம்ப் நிகழ்ச்சியில் குவிந்த மக்கள்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள் இன்று இந்தியாவுக்கு வருகை தந்த நிலையில் அவருக்கு மிக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

இந்த நிலையில் முதல் கட்டமாக சபர்மதி ஆசிரமம் சென்ற அதிபர் டிரம்ப், அதன்பின்னர் அடுத்தபடியாக குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு சென்று ’நமஸ்தே டிரம்ப்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

’நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் முதலில் அமெரிக்காவின் தேசிய கீதமும் அதனைத் தொடர்ந்து இந்தியாவின் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது அதன்பின் பிரதமர் மோடி டிரம்ப்பை வரவேற்று வரவேற்புரை ஆற்றினார் பாரத் மாதா கி ஜே என மூன்று முறையும் நமஸ்தே டிரம்ப் என மூன்று முறையும் மோடியின் முழங்கினார்

இந்தியா அமெரிக்கா நட்புமுறை வாழ்க என அங்கு கூடியிருந்த இலட்சக்கணக்கான கோஷம் எழுப்பினர் மெல்போர்ன் மைதானத்தை விட பெரியதாக அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் முதல் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply