மெட்ரோ ரயில் திடீர் பழுது பயணிகள் அவதி

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான மெட்ரோ ரயில் இயங்கத் தொடங்கியதில் இருந்து பயணிகள் மிகவும் சௌகரியமாக பயணங்களை அனுபவித்து வருகின்றனர். குறித்த நேரத்தில் டிராபிக் பிரச்சனையின்றி சரியான கட்டணத்தில் மெட்ரோ ரயில் இயங்கி வருவதால் மெட்ரோ ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது

ஆனால் திடீர் திடீரென மெட்ரோ ரயிலில் சில பிரச்சினைகள் எழுகின்றன.இன்று சென்னை ஏர்போர்ட் முதல் வண்ணாரப்பேட்டை வரை செல்லும் மெட்ரோ ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திடீரென பழுதாகி நின்றது. இதனால் போக்குவரத்து பாதியில் நிறுத்தப்பட்டது

வண்ணாரப்பேட்டையில் இருந்து ஏர்போர்ட் வரை செல்லும் மாற்றுப்பாதையில் ஏர்போர்ட் முதல் வண்ணாரப்பேட்டை வரை செல்லும் ரயில்களும் இயக்கப்படுவதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த பிரச்சனை இன்னும் ஒரு சில மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டு விடும் என்று மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்

Leave a Reply