மெட்ரோ ரயில் ஊழியர் தற்கொலை: பேஸ்புக்கில் நேரலை

டெல்லியில் மெட்ரோ ரயில்வேயில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது தற்கொலையை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

டெல்லி மெட்ரோவில் பணிபுரியும் 27 வயது சுபந்தர் சக்ரவர்த்தி என்பவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தூக்கில் தொங்கும் முன் தனது ஐடி கார்டை இருமுறை முத்தமிட்டார். இதனை அவர் பேஸ்புக்கில் நேரடியாக வெளியிட்டதால் இந்த வீடியோவை பார்த்த ஆயிரக்கணக்கானோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply