மூன்று மாவட்டங்களில் கனமழை: மீண்டும் விடுமுறையா?
தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவருமா? என்று மாணவர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழையும், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிய வந்துள்ளது
குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடாவில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று அப்பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.