மூன்று குழந்தைக்கு தாயான இந்த பெண்ணுக்கு ஒரு சபாஷ் போடுங்கள்
படத்தில் உள்ள இந்த 36 வயது பெண்ணின் பெயர் சந்தியா. கடந்த 2016ஆம் ஆண்டு இவருடைய கணவர் இறந்துவிட்டார். இவருக்கு மூன்று குழந்தைகள், 8 வயது, 6 வயது மற்றும் 4 வயதில் உள்ள அந்த குழந்தைகளை காப்பாற்ற ரெயில்வே கூலியாக வேலை செய்கிறார். இந்தியாவின் முதல் பெண் ரெயில்வே கூலி இவர்தான்.
இவர் தனது பணிக்காக தினம் 45 கிமீ பயணம் செய்து மாலை வரை கூலி வேலை செய்துவிட்டு பின்னர் வீடு திரும்பி தனது குழந்தைகளுக்கு உணவு தயாரித்து கொடுத்து தூங்க வைக்கின்றார். இந்த பெண்ணின் உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் தாய்மைக்கும் ஒரு சபாஷ் போடலாமே!
Leave a Reply
You must be logged in to post a comment.