shadow

மூன்றாம் பிறை’ படத்தை தயவுசெய்து ரீமேக் செய்யாதீர்கள். வித்யாபாலன்

கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த ‘மூன்றாம் பிறை;’ திரைப்படம் காலத்தால் அழியாத ஒரு படமாக இருந்து வருகிறது. கமல், ஸ்ரீதேவி இருவரும் போட்டி போட்டு இந்த படத்தில் நடித்திருப்பார்கள். கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகர் தேசிய விருதும் இந்த படத்தை இயக்கிய பாலுமகேந்திராவுக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும் கிடைத்தது. நடிகை ஸ்ரீதேவி நூலிழையில் தேசிய விருதை தவறவிட்டார்

இந்த நிலையில் இந்த படத்தை மீண்டும் ரீமேக் செய்யவுள்ளதாக பாலிவுட்டில் ஒரு பேச்சு அடிபடுகிறது. ஸ்ரீதேவி கேரக்டரில் நடிக்க நடிகை வித்யாபாலனுக்கு அழைப்பு வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய வித்யாபாலன், ‘”நான் ஒரு ரீமேக் படத்தில் நடிக்க மாட்டேன். அப்படி ஒரு படத்தில் நடிக்க எனக்கு தைரியம் கிடையாது. சத்மா ரீமேக் என்னிடம் வந்தது ஆனால் நான் மறுத்துவிட்டேன். சத்மா போன்ற ஒரு படத்தை யாரும் தொடக்கூடாது. ஏன் அதை மீண்டும் எடுக்க வேண்டும்? அது காலத்துக்கும் நிலைத்து நிற்கும் படம். எனவே ‘மூன்றாம்பிறை’ படத்தை தயவுசெய்து யாரும் ரீமேக் செய்ய வேண்டாம்’ என்று கூறியுள்ளார்

 

Leave a Reply