shadow

மூன்றாக பிரிகிறது வேலூர் மாவட்டம்: அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

நிர்வாக வசதிக்காக அவ்வப்போது பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி என்ற புதிய மாவட்டத்தை அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இந்தா நிலையில் தமிழகத்தின் பெரிய மாவட்டங்களில் ஒன்றான வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க முதல்வர் திட்டமிட்டிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் வேலூர், திருப்பத்தூர் மற்றும் அரக்கோணம் என மூன்று மாவட்டங்களாக பிரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

 

Leave a Reply