மூடுபனி நீடிக்கும்: சென்னை வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் உள்மாவட்டங்களில் மூடுபனி இன்னும் ஒருசில நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பனி வாட்டி வருகிறது. குறிப்பாக ஊட்டி மற்றும் கொடைக்கானலில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
இந்த நிலையில் மூடுபனி குறித்து இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் ‘சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரத்தில் மூடுபனி இருக்கும். நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 2 இரவுக்கு உறைபனி நிலவும் என்று தெரிவித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.